அரசியல்
அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த
நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்றை தினம் நிதியமைச்சில் பெற்றுள்ளது.
இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச,
எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் . சுனாமி ஏற்பட்ட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் சீர்படுத்த முடிந்தது.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் சரியான திட்டமிடல் ஊடாக தான் நிதியமைச்சர் என்ற வகையில் செயற்பட்ட முடிந்தது.
இன்று நிதியமைச்சு பல சவால்களை எதிர்கொள்ள உள்ளது. செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
பொருளாதாரம் சம்பந்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.