கீரியங்கள்ளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் பலி!

கீரியங்கள்ளி, முந்தலம் வீதியின் கல்குலிய பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கல்குலிய பகுதியை சேர்ந்த 4 வயதுடைய மெதுல பிம்சர எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் தனது தந்தை மற்றும் 15 வயதுடைய மற்றுமொரு சிறுவனுடன் நீர் எடுத்துவர சென்ற சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் தலைக்கவசம் அணிந்திருந்ததுடன் ஏனைய மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.