ஹல்தமுல்லபிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் இன்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 8 மாணவிகளும் 2 மாணவர்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி ஹல்தமுல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் மேலதிக வகுப்புகளில் கல்வி பயின்று விட்டு வீடு திரும்பிய சந்தர்பத்திலேயே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹபுதல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
M.F.M.Ali