சமூகம்
கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற சோகம்!

கொழும்பு – கொச்சிகடை நகரில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உந்துருளியொன்று கொங்கிரீட் கலவை பாரவூர்தியில் மோதியதில் சம்பவம் அனர்த்தம் நேர்ந்துள்ளதுடன், உந்துருளி செலுத்துனரின் கவயீனம் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் உந்துருளியை செலுத்தியுள்ள நிலையில் , அவரும் மற்றும் மூன்றரை வயது அவர்களது குழந்தையும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் கொச்சிகடை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் கொச்சிகடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.