மலையகம்
கொட்டகலையில் குளவி கொட்டு ! சிறுவர்களும் முதியவர்களும் பாதிப்பு
தோட்டத் தொழிலாளர்களையும், பிரதேசவாசிகளையும் குளவிகள் கொட்டியதினால் 16 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் பெரியோர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 11 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.