அரசியல்
சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிக்கு நோர்வே கண்டனம்
சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம் என நோர்வே தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் என்பது ஸ்தாபனங்களிற்கு மதிப்பளிப்பது என்பது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் அரசியல் சூழ்நிலை ஆழ்ந்த கவலையளிக்கின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அமளி துமளி நிலவியவேளை பல வெளிநாட்டு தூதுவர்கள் பார்வையாளர்கள் பிரிவில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.