செய்திகள்
ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவுமில்லை – பிரதமர்

ஜனாதிபதி என்னை பதவி விலக கோரவில்லை எனவும் மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் இன்று (27) அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.