மலையகம்
திம்புள்ள பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: 4பேர் கைது
கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் அவரது பிறப்பிடமான திம்புள்ள தோட்டத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொழும்பில் பழக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரழந்தவர் பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குமார் டிக்ஷன் (வயது 21) என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.