மலையகம்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்கும் வரை போராட்டம்..

தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகளுடன் நடைப்பெற்ற தொடர் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும் வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.