செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, சபரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என இந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.