நாட்டின் பல பாகங்களில் ஆழங்கட்டி மழை….

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஆழங்கட்டி மழை பொழிவதற்கான சாத்தியம் சிறிதளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகா ணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சுமார் 50 மி.மீற்றுக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் இந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதன்போது மின்னல் தாக்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மேலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.