நாவலபிட்டி பகுதியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு ..?

நாவலபிட்டி பகுதியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாவலபிட்டி மாபாகந்த தோட்டத்தில், ஐந்து நாட்களுக்கு முப்பு காணாமல் போயிருந்த 17 வயதுடைய காவிந்த மதுஷான் என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்டுகின்றது .
நேற்றைய தினம் (20/03/19) குறித்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவரின் பெற்றோரால் காணவில்லை என கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.
இந்நிலையில், முறைப்பாட்டிற்கு அமைய மாணவரை தேடிவந்த பொலிஸார், குறித்த மாணவரின் வீட்டிற்கு பின்புறத்தில் அமைந்துள்ள வனப்பகுதியின், கற்குகையிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் , நாவலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.