மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம்- பொகவந்தலாவை செல்வகந்தை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அல்லலற்ற வாழ்வினையே அருளிடவே வருவாய்
உன்னருளால் நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்
செழிப்புமிகு மலைச்சாரலில் கோயில் கொண்ட தாயே
எம்தமிழர் வாழ்வுக்கு வழி காட்ட வருவாய்
வளம் கொண்டு நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்
மலைசூழ்ந்த உயர் நிலத்தில் வந்தமர்ந்த தாயே
மகிழ்ச்சி குன்றா வாழ்வினையே எமக்களிக்க வருவாய்
நேர்மையுடன் நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்
அன்பு கொண்டு அணைத்தெம்மை ஆதரிக்கும் தாயே
அச்சமில்லா எதிர்காலம் தந்திடவே வருவாய்
நிம்மதியாய் நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்
கேட்ட வரம் தந்தெம்மை ஆட்சி கொள்ளும் தாயே
கேடில்லா நல்வாழ்வைத் தந்திடவே வருவாய்
தொல்லையின்றி நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்
தளராத மனம் தந்து காத்தருளும் தாயே
தெளிவான மனவலிமை தந்திடவே வருவாய்
துயரங்கள் அண்டாது நாமென்றும் வாழவழி வேண்டும்
செல்வகந்தை வீற்றிருக்கும் முத்துமாரியம்மா அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.