நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் குற்றச்சாட்டு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 17 நோயாளர்களுக்கு பார்வைக் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு வழங்கிய ஆலோசனைக்கிணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன .
இவ்வாறான பிரச்சினை நுவரெலியா வைத்தியசாலையில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ள நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், குறித்த தடுப்பூசி தேசிய மருந்து தர சோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.