மலையகம்
பதுளையில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு
பதுளை – தம்பேதன்னை தோட்டத்தில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு ஈடுபட்டுள்ளதுடன் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று தம்பேதன்னை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு காலத்தில் இழந்த வருமானத் தொகையை சந்தாப்பணத்தின் ஊடாக ஈடுசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியும், இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனத்தினரும் பேச்சுவார்த்தைக்கு இணங்கிருப்பது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் எஸ். அருள்சாமி குறிப்பிபட்டுள்ளார்.
You completed some fine points there. I did a search on the topic and found a good number of persons will consent with your blog.