Breaking Newsசெய்திகள்
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

அனைத்து அரச மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமொன்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.