பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் மோதல்
நுவரெலியா – கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு ஆசிரியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை நேரத்தில் வகுப்பறையில் இரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மத்தியில் மோதலில் ஈடுட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வலயக்கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியர்களுக்கு இடையிலான மோதலின் போது தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மோதலின் போது நகம் கீரல் சிராய்வு காயம் ஏற்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு ஆசிரியர்களின் முறைபாடுகளுக்கமைய விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.