பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதை பெற்ற முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதுடன், பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை அவருக்கு கையளித்துள்ளார்.
இந்த விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் 4ஆவது ஜனாதிபதியாக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார்.
அதற்கு முன்னர் அவர் மேல் மாகாண முதலமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயலபட்டு வருகிறார்.