செய்திகள்
புத்தளம் பஸ் விபத்தில் இதுவரை ஐவர் பலி 30 பேர் படுகாயம்
புத்தளம் – மதுரங்குளி முந்தல் 10ஆம் கட்டையில் இன்று அதிகாலை தனியார் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸானது முச்சக்கர வண்டியை கடக்க முனைந்த வேலையில் வீதியை விட்டு விலகி குறித்த விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.