மண்சரிவில் பாதிப்புக்குள்ளாகிய குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அப்புத்தளை – தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில் 2014ல் மண்சரிவில் பாதிப்புக்குள்ளாகியிருந்து வாழ்ந்து வந்த 68 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (27/02/2019) நடைபெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களுக்கு தம்பேதன்ன பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன்போது,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி, பசறை பிரதேச சபையின் செயலாளர், தோட்ட முகாமையாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.