யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸார் இதனை எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவைச் சேர்ந்த 7 வயதான சாவிதன் மற்றும் ஐந்து வயதான சார்வின் ஆகிய
சகோதரர்களே நீர் சேமிப்புப் கிடங்கினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த சிறுவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.