சமூகம்
மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு
காலி – கொட்டாவை பிரதேசத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதி மக்கள் மேற்கொண்ட அறிவிப்புக்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க எனவும்,அவர் தொடர்பில் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.