மலையகம்
மலையக மக்களுக்கான நரேந்திர மோடியின் அறிவிப்பு

இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இரு நாடுகளுக்கிடையில் நட்பை வலுப்படுத்துவதுடன் நேசத்திற்கும் காரணமாக இருக்கின்றார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இன்று இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட “மகாத்மா காந்தி புரம்”புதிய கிராமத்தின் தனி வீடுகள் திறக்கும் விழாவில் இந்தியாவிலிருந்து காணோளி மூலம் நேரடியாக மலையக மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.