சமூகம்
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரத விபத்தில் இருவர் படுகாயம்!
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஹிக்கடுவ பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், படுகாயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து பொருட்கள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவந்துள்ளது.
மேலும், லொறியின் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.