சமூகம்
யாழில் பயணித்த புகையிரதத்துடன் மோதிய கார்! ஒருவர் படுகாயம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் காரொன்ருடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று மதியம் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த காரொன்று பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதன்போது எதிரே புகையிரதம் காருடன் மோதி கந்தர்மடம் அரசடி வீதி வரை இழுத்துச் சென்றுள்ளது.
விபத்தில் காரில் நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கார் முற்று முழுதாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.