செய்திகள்
யாழில் வாகன விபத்து: இளைஞன் ஒருவன் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு ஏ 9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நவநீதராசா வரதன் (23 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.