யாழில் வாள்வெட்டு தாக்குதல்: மூவர் படுகாயம்

யாழ் – கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் மூவர்
படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலின்போது, வீடு மற்றும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளில் இன்று அதிகாலை ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டினை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) உட்பட செல்வராசா சஜீபன் (வயது 25) ஆகியோருடன் அயல் வீட்டுக்காரப் பெண்மணி பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.