மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.12.07.2023.
நாளாந்தம் பல பேருந்து சேவைகள் இடம் பெற்று வரும் மஸ்கெலியா நல்லதண்ணி மஸ்கெலியா, மரே பிரதான வீதியில் பாரிய அளவில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையானது நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தானது.
கடந்த சிவனொலிபாத மலை பருவ காலங்களில் கூட இந்த வீதி செப்பனிடப்படவில்லை.
இவ்வீதியை அபிவிருத்தி செய்யும் முகமாக கடந்த 2020 ல் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன் வந்து இயந்திரங்களை லக்க்ஷபான தோட்ட பகுதியில் வீதி ஓரமாக நிறுத்திவிட்டு சென்று வருடங்கள் பல சென்ற போதும் அந்த இயந்திரங்கள் துருப்பிடித்து உக்கும் நிலை உருவாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இவ் வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.