வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு, முறிகண்டி அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில்
முறிகண்டி தனிலிருந்து வழிகாட்டும் பெருமானே
வழித் துணையாயிருந் தெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
கானகத்தே தனித்திருந்து வழிகாட்டும் பெருமானே
வாழவழி காட்டி யெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் ஆதரித்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
நம்பித் தொழும் அடியவர்க்கு நலமளிக்கும் பெருமானே
நிம்மதியைத் தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் அரவணைத்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
அச்சம் தடுத் தெம்மை ஆட்கொள்ளும் பெருமானே
ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் ஆசிதந்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
செய்கருமம் வெற்றி பெற துணையிருக்கும் பெருமானே
சீர் பெற்ற வாழ்வு தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் நிலை குலையா உறுதி தந்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே
தந்தை தாய் பெரியரென்று அறிவுதந்த பெருமானே
தாழாத வாழ்வு தந்தெம்மை வாழவைக்க வாருமைய்யா
என்றும் திடமான மனம் தந்து எமைக் காக்க வேண்டும்
முறிகண்டி கோயில் கொண்ட விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.