ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் நகர்ப் பகுதியில் நேற்று (15) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 1 கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரசியத் தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.