உதிரி பாகங்களாக பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு பொறுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த இயந்திர திறன் கொண்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயது மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாகங்களை ஒன்றிணைத்துப் பொறுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், இந்நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட 1000 CC இயந்திர திறனைக் கொண்டவை என்றும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்களில் மூன்று BMW வகையையும், மூன்று டுக்காமி வகையையும் சார்ந்தவை ஆகும். இவற்றில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் ஒருவரிடம் இருந்தும் மற்றையது இன்னொருவரிடம் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.