விஷ்ணு ஆரோஹணம் நிறுவனத்தின் மற்றுமொரு போஷாக்கு வேலைத்திட்டம் 24.12.2022 மேஃபீல்ட் தோட்ட பிரிவை சேர்ந்த ரொக்கில் பிரிவில் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும்.
அதே போல மேஃபீல்ட் சார்ம்ஸ் பிரிவில் உள்ள சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட முதியவர்களுக்கான மதிய உணவுக்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், விஷ்ணு அரோகணம் நிறுவனத்தின் தலைவருமான கௌரவ கலாநிதி சதானந்தன் திருமுருகன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன். நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட வேளையில் தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களின் குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கல்விசார் உதவிகளை எதிர்காலத்தில் வழங்க முன்வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.