மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.25.12.2023.
2023/2024 வருடத்திற்கான சிவனடி பாத மலை பருவகாலம் நாளை 26ம் திகதி ஆரம்பம்.
இதன் காரணமாக இன்று காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து சுப வேளையில் சிவனடி பாத மலைக்கு மூன்று வழிகளில் சுவாமிகள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து குருவிட்ட, பலாங்கொட, மாராத்தன்ன, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி வழியாகவும், இரத்தினபுரி, காவத்த, அவிஸ்சாவலை, தெஹியோவிற்ற, எட்டியாதொட்ட ,கரவனல்ல, கித்துல்ஹல, கினிகத்தேன, வட்டவளை ,ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி , கல் பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து குருவிட்ட வழியாக சிவனடி பாத மலைக்கு சுவாமி கொண்டு செல்ல படும்.
இவ்வாறு கொண்டு செல்ல படும் சுவர்கள் மற்றும் ஆபரணங்கள் இன்று இரவு சிவனடி பாத மலைக்கு லக்சபான இராணுவ முகாம் சிப்பாய்கள் மூலம் நல்லதண்ணி நகரில் இருந்து மிகவும் பாதுகாப்பான முறையில் பல்லக்கில் வைத்து கொண்டு செல்ல பட்டு பிரதிஷ்டை செய்து பௌத்த பிக்குகள் பிரித் ஓத பட்டு 26 ம் திகதி காலை முதல் சிவனடி பாதமலை பருவகாலம் 2023/2024 ஆரம்பித்துள்ளது.
இன்று காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து சுப வேளையில் ஆரம்பமான சுவாமிகள் கொண்டு வரும் ஊர்வலம் பிரதான சாலைகள் வழியாக வாகனங்கள் இன்று இரவு நல்லதண்ணி நகரை வந்து அடையும் அதற்கான முழுமையான பாதுகாப்பு அந்த அந்த பகுதியில் உள்ள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் விடுமுறை காரணமாக புகையிரத வழியாகவும் தனியார் அரச பேருந்துகளில் மற்றும் சிறு வாகனங்கள் மூலம் அதிகளவில் யாத்திரிகர்கள் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களுக்கான பாதுகாப்பு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற் கொண்டு வருகின்றனர்.
நாளை முதல் ஆரம்பமாகும் சிவனடி பாத மலை பருவகாலம் எதிர் வரும் மே மாதத்தில் வரும் வைகாசி விசாகம் பூரணை தினங்களில் நிரைவு பெறும்.
நல்லதண்ணி பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இனைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளனர்.
மவுசாகல நீர் தேக்கத்திலும் காசல்ரீ நீர் தேக்கத்திலும் யாத்திரிகர்கள் நீராட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்க பட்டு வருகிறது.