தேசிய கல்வி நிறுவனத்தின் மீப்பே பிரிவிற்கு பணிப்பாளராக தமிழ் ஒருவர் நியமனம்.
தேசிய கல்வி நிறுவனத்தின் மீப்பே வளாகத்தில் அமைந்துள்ள கல்வி நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி துறையின் பணிப்பாளராக கலாநிதி எஸ்.கருணாகரன் அவர்கள் (12.02.2024) அன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
இவர் மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.