மீண்டும் காஸ் விநியோகம் இன்று (31) முதல் ஆரம்பமாகுமென லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 50 ஆயிரம் சமையல் எரிவாவு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. 3,500 மெட்ரிக் தொன் காஸ்சுடன் கூடிய கப்பல் நேற்று காலை நாட்டை வந்தடைந்தது.
இந்த காஸ்ஸை தரையிறக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் முதல் இந்த காஸ்ஸை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸ்ஸை பெற்றுக் கொள்ளும் விற்பனை முகவர்கள் தொடர்பான தகவல்களை லிற்றோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.