2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின்படி கே/தெஹி/தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய மாணவி ஜெயசீலன் உபெக்ஸா அபிலாஷினி 9A சித்தி பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் 9A சித்தி கிடைக்கப்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சாதனைப்படைத்த மாணவி கேகாலை மாவட்ட தேவாலகந்த தோட்டம் தெஹியோவிற்றயை சேர்ந்த ஜெயசீலன் – ரஞ்சனி தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.