HTML tutorial

தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ,இம்மாதம் 19ம் திகதி முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தாமரைக் கோபுரத்தை அண்மித்த பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதனை கண்டுகளிப்பதற்கு வருவோரின் வசதி கருதி வாகனங்களை கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டள்ளன.

MOD  கார் தரிப்பிடம், காலி முகத்திடல் வீதி ஓரத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதி மற்றும் புதிய பாலதக்(சாரணர்) ஷ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடம் இடம் என்பன ஆகும்.