HTML tutorial

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் வலுவிழந்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக இலங்கை மீது தாக்கம் செலுத்திய தாழமுக்க தற்போது நாட்டை விட்டு மேற்கு கரையோரமாக நகர்ந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மெரல் மென்டிஸ் கூறினார்.

மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களிலும் தாழ்வார பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரையோரப் பிரதேசங்களிலும் காலநிலை சீராக இருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.