HTML tutorial

குறைந்த வசதிகள் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளில் பொருளாதார சிரமம் உள்ள குடும்பங்களில் முதலாம் தரத்தில் சேரும் சிறுவர்களுக்கு பள்ளி உபகரணங்களை தொகுப்பு வழங்கும் திட்டத்தை நகர்ப்புற குடியிருப்புகள் அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பிக்கிறது. நகர்ப்புற சேரிகளில் வாழும் மக்களை பொருளாதார ரீதியாகவும்சமூக ரீதியாகவும்கலாச்சார ரீதியாகவும்கல்வி ரீதியாகவும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

5000 ரூபா பெறுமதியான 100 பாடசாலை உபகரணங்களை இவ்வருடம் இரண்டு கட்டங்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக  நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. 

முதற்கட்டமாக பொரளைசஹஸ்புர மற்றும் சிங்கபுர வீடமைப்புத் திட்டங்களில் வசிக்கும் 31 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணப் பெட்டிகள் நகரக் குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தலைமையில் நேற்று (31) சஹஸ்புர சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரியந்த ரத்நாயக்கநகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபையானது மக்களின் பௌதீக மற்றும் மனித அபிவிருத்திக்காக பல விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால்ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இதனால் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.