HTML tutorial

பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரபர்வத்தை மடுகஸ்தலாவ பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட விஷேட அதிரடிப் படையினர் வெடி மருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதோடு 29 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் மடுல்சீமை பொலிஸாரிடம் விஷேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை இரண்டாம் கட்டை கமேவெல பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி தன்கைவசம் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட விஷேட அதிரடிப் படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதோடு தொளும்புவத்தை இரண்டாம் கட்டை கமேவெல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடி படையினர் ஒப்படைத்தனர்.

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா