பசறை கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவரே ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பசறை – பராக்கிரம மாவத்தை பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் 18 வயது இளைஞர் ஒருவரும் ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் இரண்டு சந்தேக நபர்களையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்