வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீத்தா அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பில் ஆலயத்தின் தர்மகத்தாவும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் நேற்று (07)கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில் ,கும்பாபிஷேகத்துக்கு ரவிசங்கர் குருஜி வரவிருப்பதோடு அயோத்தியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு 17ம் திகதி அன்று கொழும்பு மயூராபதி ஆலயத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்று தீர்த்த ஊர்வலம் கொழும்பில் முக்கிய நகரங்களை கடந்து கடுவலை ,அவிசாவலை ,யட்டியாந்தோட்டை ,கினிகத்தேனை ,ஹட்டன் ,கொட்டகலை ,தலவாக்கலை ,பூண்டுலோயா ,இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்துக்கு சென்றடைந்து மறுநாள் நுவரெலியா ஊடக சீத்தா அம்மன் ஆலயத்தை சென்றடையும் மேலும்19ம் திகதி இடம்பெறும் மஹாகும்பாபிஷேகத்தில் இந்தியாவிலிருந்த அதிகமான பக்கத அடியார்கள்
கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்த அவர் இது நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பை ஏற்படுத்தும் தெரிவித்தார்.