9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் கைது….
பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து 26 மற்றும் 30 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், 5 வருடங்களுக்கு முன்பு சிறுமியை தங்கையிடம் ஒப்படைத்து விட்டதாகவும், சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

