Author: Thana

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது. செ.திவாகரன் டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார். குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையொட்டி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் இந்நிலையில், சந்தேக நபர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Read More

செ.திவாகரன் – நானுஓயா நிருபர் நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம். நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் நிலவியது . குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து வருகிறது. இதில் நுவரெலியா நகருக்கு உள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது இதில் நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் போன்ற வீதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும்…

Read More

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் சிசிடிவி (CCTV) காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) ஆகியோரே உயிரிழந்தனர். கொலையைச் செய்த சந்தேகநபர், அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், தற்போது சந்தேகநபரின் நடமாட்டங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகளைத் திரட்டியுள்ளனர். விசாரணைகளில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்:  சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று,…

Read More

செ.திவாகரன் நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்புத் திருடப்பட்டுள்ளது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.04.2026 முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று (22) சிறப்பு விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகைந்தந்தனர். நுவரெலியாவில் பழமையான இவ் கட்டிடத்தில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அறிவியல் கருவியாக காணப்பட்டது இது கட்டிடத்தை விட உயரமாக காணப்பட்ட கடிகார கோபுரத்தின் பொருத்தப்பட்டு, மின்னலின் அதிகப்படியான மின்சாரத்தை ஈர்த்து, பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தும் இவ் கருவியே…

Read More

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையானது, அரசாங்கத்தின் கொள்கை அல்லது தவறான தீர்மானம் அல்ல எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உருவான உலகளாவிய நெருக்கடியின் விளைவே எனவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் விலைகள், எரிவாயு மற்றும் உர விலைகள், அத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் வேகமாக அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும் மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஏற்றுமதி பொருட்களின் டொலர் விலையை விட இறக்குமதி பொருட்களின் டொலர் விலைகள் அதிகரித்தமை இலங்கையை பிரதானமாகப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உலகளாவிய…

Read More

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய,…

Read More

செ.திவாகரன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த ஒரு பாடசாலை மாணவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தன. https://www.youtube.com/shorts/_sufc_0TXmY ஹட்டன் – பொககவந்தலாவ பிரதான சாலையில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில் இன்று காலை சுமார் 7:10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்து நடந்த நேரத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்துள்ளன எனவும் தற்போதைய நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா…

Read More

வெளிமடையில் மீண்டும் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்: வடிவேல் சுரேஷ் கடும் கண்டனம்! வெளிமடையில் நேற்று (21)தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி சப்பாத்து கால்களால் தன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=HX-iZtKDi4I ​ இதே வேளை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். வெளிமடையில் நேற்று தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித காரணமும் இன்றி இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தொழிலாளார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் அதே வேளையில், இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள்…

Read More

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை – அவிசாவளை வீதி தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்! பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு தோட்டப் பிரதேசங்களிலும் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ (People’s Safety Committees) அமைக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பதில் கடமை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று வலியுறுத்தினார். ​பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான விசேட உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (21) மாலை 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சுந்தரலிங்கம் பிரதீப்  அவர் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். ​ ​பெருந்தோட்ட மக்களுக்கான பாதுகாப்புச் சூழலை பலப்படுத்துவதையும், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர் (IGP), பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIGs) மற்றும்…

Read More