Author: Thana
என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*
*என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!* வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, காத்தான்குடி என்.எம் இன்ஸ்டிடியூட் (NM Institute) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இலங்கையிலுள்ள அனைத்து பாகத்திலிருந்தும் பங்கு கொள்ளக்கூடிய வகையில் பிரம்மாண்டமான திறமைக் கண்காட்சிப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. காத்தான்குடியில் உள்ள ‘ரோயல் ஜுமைரா ஹால்’ (Royal Jumairah Hall) இல் நடைபெறவிருக்கும் இப்போட்டி குறித்து என்.எம் இன்ஸ்டிடியூட்டின் பணிப்பாளர் முஸ்தகிமா நௌபல் இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது வெறும் கல்விப் பட்டம் பெற்றவர்களுக்கான போட்டி அல்ல என்றும், கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், தங்களுக்குள் ஏதேனும் ஒரு கைத்தொழில் திறமையைக் கொண்டுள்ள வயதுவரையின்றி அனைவரும் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திறமைக் கண்காட்சியில் ஆரி வேலைப்பாடு, தையற்கலை, கேக்…
நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு நுவரெலியா நகரில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. நுவரெலியா – சாந்திபுரம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, நுவரெலியா பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்தை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கிரிகரி குளத்திற்கு அருகிலுள்ள தலக்கல ஓயாவிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர்களுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களினால் நேற்று (07.07.2026) இந்த அட்டை கையளிக்கப்பட்டது. புதிய நடைமுறையின் கீழ் பெற்ற முதல் அட்டை கடந்த 2026 ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களினால் அறிவிக்கப்பட்ட OCI நடைமுறை எளிமைப்படுத்தலின் கீழ், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் (IOT) OCI அட்டைக்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது. இந்த புதிய தகுதி மாற்றத்தின் கீழ் இலங்கையில் வழங்கப்படும் முதலாவது OCI அட்டை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகமானது e-OCI சேவை இச்சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள e-OCI சேவையையும் உயர்ஸ்தானிகர், பிரதி அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். இந்த புதிய…
இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – எச்சரிக்கை!** இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, குறிப்பிட்ட சில கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன், கடல் பகுதி கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான மற்றும் வறண்ட வானிலை நிலவும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ### **பலத்த காற்று எச்சரிக்கை** மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மக்கள் இது குறித்து…
“வரி சக்தி 2026” தேசிய வரி வாரம் ஆரம்பம் வரி சக்தி 2026 என்பது வெறும் வரி வசூலிக்கும் செயற்பாடு மாத்திரமன்றி, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாகும் இன்று எவரிடமிருந்தும் கடன் பெறாமல், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வரி சக்தி 2026” தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு…
‘Dream Destination’ திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு
‘Dream Destination’ திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka செயலகத்தினால் நிலைபேறான திட்டமாக Dream Destination வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. களனிவெளி புகையிரத பாதையின் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை உப புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம், பல வருடங்களாக புனரமைக்கப்படாததன் காரணமாக எவ்வித வசதிகளுமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.…
அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவிற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவிற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இலங்கையின் அரச வருமானக் கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவிற்கும் (RARMB) சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் வரிக் கட்டமைப்பு, சுங்க நடைமுறைகள், மதுவரி முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த அரச வருமான மாதிரிகள் ஆகியன மத்திய கால மூலோபாயத் திட்டத்தின் (MTRS – Medium Term Revenue Strategy) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புச் செயல்முறையை மீளாய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இணங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், நிதி அமைச்சு, இலங்கை…
கமத்தொழில் , கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்
கமத்தொழில் , கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளம் தொழில்முனைவோருக்கான குறைந்த வட்டி வங்கி கடன் வசதிகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கு அறிவுறுத்தல் கமத்தொழில் , கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதித் தேவைகள் குறித்து கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கமத்தொழில் , கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் திணைக்களம்,கமநல அபிவிருத்தித் திணைக்களம். ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், அறுவடைக்குப் பின்னரான தேசிய முகாமைத்துவ நிறுவகம் உள்ளிட்ட நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டிலே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆராய விசாரணைக்குழு நியமனம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து (05) மற்றும் ஆறாம் (06) திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த விசாரணைக்குழுவின் செயலாளர்/அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டீ அசேல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-07-07
2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று 16 போட்டியில், பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதிப் போட்டிக்கு அதிரடியாகத் தகுதி பெற்றுள்ளது. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் எகிப்து அணியின் யாசர் இப்ராஹிம் (Yasser Ibrahim) ஒரு அபாரமான கோலை அடித்து, தனது அணிக்கு 1-0 என முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ (Mostafa Ziko) எகிப்து அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்து அர்ஜென்டினாவுக்கு கடும் அதிர்ச்சியளித்தார். இதனால் எகிப்து அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தது. எனினும், ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத அர்ஜென்டினா அணி பதிலடி கொடுக்கத் தொடங்கியது. 79ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ (Cristian Romero) தனது அணிக்கான முதல் கோலை…