Author: Thana
தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம் பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும் ஒரு தோட்ட தொழிலாளியின் மகன், தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் உடனடியாக பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹாலிஎல, உனுகல தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஐக்கிய தொழிலாளர் முன்னணி தலைவர் என்ற முறையில் ஆனந்தராஜா பாபு சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்படும் தோட்ட அதிகாரி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச் சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன…
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் கடமைகளையும் தட்டிக்கழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற நீதி அமைச்சர் தவறியுள்ளார். இதன் காரணமாகவே, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டனர். தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர்,…
மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!
ACT NOW அமைப்பால் கொழும்பு- 07 JDA Perera Gallery இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “uncover“ புகைப்பட கண்காட்சியை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்டகட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (17.07.2026) பார்வையிட்டதுடன், அங்கு இடம்பெற்ற மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.
வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்தால் சிறை அல்லது அபராதம்! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இது குறித்த முக்கிய அறிவிப்பை நேற்றைய தினம் (17) ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார். 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் (NATA Act) கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின் பிரகாரம், நாட்டில் புகையற்ற புகையிலைத் தயாரிப்புகளை (Smokeless Tobacco) விற்பனை செய்வது ஏற்கனவே முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத்…
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்! மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, சமீபத்தில் இராகலை (செயின்ட் லியோனார்ட்ஸ்) தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்கள், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான விபரங்களை முன்வைக்காமல் பெறப்பட்டதாகவும், குறித்த ஆறு குடும்பங்களும் மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் என்பதாலும், அவர்களை அக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்விவகாரம் தொடர்பாக மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேன்முறையீடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமையை…
இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு இந்தியத் துணைக்கண்டத்திற்கும் கடல் கடந்த ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று உருவானது அல்ல. அவை பன்னெடுங்காலமாக வணிகம், நாடுகாண் பயணங்கள் ஊடாக வளர்ந்து வந்துள்ளன. இத்தொடர்பானது பிற்பட்ட காலங்களில் காலனித்துவம் ஊடாக மேலைநாட்டோடு இன்னும் நெருங்கிய தொடர்பையும், அவற்றோடு இந்து பண்பாட்டையும் வளரச் செய்தது. இதற்கு வணிகம், குடியேற்றம், மதப்பரப்பு போன்ற காரணங்கள் உந்துசக்தியாகக் காணப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில்தான் மேலைநாட்டு அறிஞர்களின் இந்திய வருகை ஏற்பட்டது. இந்த மேலைநாட்டு அறிஞர்களின் வருகையினால் இந்தியாவின் தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் கலை, பண்பாடு என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ஆஸ்திரிய நாட்டுப் பெண் அறிஞரான ஸ்டெல்லா கிராம்ரிஷ் (Stella Kramrisch) அவர்களின் வருகையும் அமைந்தது. இவரின் இந்திய வருகையினால் அதுவரையிலும் காணப்பட்ட இந்தியாவின் இந்து கட்டிடக்கலை தொடர்பான மேலைத்தேசத்தவர்களின் ஆய்வுகள் சரியாக ஆவணப்படுத்தப்பட்டன. அந்தவகையில், இந்து கோயில் கட்டிடக்கலையை ஆய்வுக்கு…
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), கொழும்பு கோட்டை காவல்துறையின் ஆதரவுடன், திங்கட்கிழமை காலி முகத்திடல் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடும் வியாபாரிகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட வியாபாரிகள் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கண்டறியப்பட்டனர். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் எவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று குறிப்பிட்ட அதிகாரசபை, இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க நாடு தழுவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு! இலங்கை ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறையின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்ட நிர்ணயம் (Match-fixing) மற்றும் விளையாட்டு சார்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்று (ஜூலை 17) நடைபெறவிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச்…
சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா மாத்திரமன்றி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். பொது மக்கள் மாலையில் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்குவதற்காக சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒரேயொரு முக்கிய இடமாக இந்த கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா காணப்படுகின்றது. ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பூங்கா, கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இது திறந்து வைக்கப்பட்டு, மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடம், தற்போது பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பூங்காவில் மின்விளக்குகள் எரியாததால் இரவு வேளைகளில் இவ்விடம் முற்றிலும் இருள்…