Author: Thana

வவுனியாவில் தனது 14 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு, 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். ​கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெற்றோர்கள் பிரிந்திருந்த நிலையில், தாயாரின் அரவணைப்பின்றி தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். குற்றச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்ததுடன், இரண்டரை வயதில் மற்றொரு குழந்தையும் இருந்துள்ளது. ​சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டilt இருந்த தந்தை, இக்கொடூரக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். ​இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். ​இதன்படி, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறின் மேலும்…

Read More

இருபதாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் எதிர்வரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ​ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக, இந்த இலஞ்சப் பணம் கோரிப் பெறப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபரிடம் இருந்த உண்மையான போதைப்பொருள் விவகாரத்தை மறைத்து, 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனை பெற்றுக்கொடுக்கவும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட வழிவகுக்கவும் இந்தத் தொகை பெறப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ​கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி, குறித்த பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனைப் பகுதியிலும் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ​இதனையடுத்து, சந்தேக…

Read More

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த இசைக்கலைஞர் வித்தகர் நந்தா மாலினியின் மறைவையொட்டி, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ​இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய மூன்று தினங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​இது தொடர்பான அறிவுறுத்தலானது, 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டாரவின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ​இலங்கையின் இசை உலகில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய பிரபல பாடகியான நந்தா மாலினி, தனது 82 ஆவது…

Read More

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மீது வீண் கல்விச் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.” பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளையோர் சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு மன ஓய்வு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதால், அக்காலத்தில் அவர்களின் மனதிற்கு அழுத்தம் தரும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார். பிள்ளைகளின் கல்வி மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மன நல்வாழ்வு குறித்தும் பரந்த அளவில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளை பாடசாலைக் கல்வியை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே பயில்வதில்லை என்றும், 13 வருடங்கள் வரை கல்வி கற்பதனால், பரீட்சைப் பெறுபேறுகளை வைத்து மட்டும் அவர்களின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்க முடியாது எனவும்…

Read More

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு: பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கடிதம்! பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPCs) நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக மலையகத் தமிழ் சமூகம் பாதிக்கப்படுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது தீவிரக் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சர் கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன அவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் (ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் அனைவரும் இலங்கையின் குடிமக்கள் என்பதோடு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்குகளின் கீழ் சமமான பாதுகாப்பைப் பெற தகுதியானவர்கள் என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ‘தித்வா’ புயலுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள்…

Read More

*”அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்* தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை உணராமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கடந்த கால அரசாங்கங்களையும் சுற்றறிக்கைகளையும் குற்றம் சாட்டி நேரத்தை வீணடித்து வருவதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள செவிலியர் ஆடை விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் (20) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்திடம் தான் அதிகாரம் உள்ளது என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே முடியும்; ஆனால், தீர்வைக் கொண்டுவரும் அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது. ஆடைப் பிரச்சினைக்கு பழைய சுற்றறிக்கையே காரணம் எனக் கூறுவது வேடிக்கையானது. சுற்றறிக்கை என்பது பகவத் கீதையோ, திருக்குரானோ, விவிலியமோ அல்லது…

Read More

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்! தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது. அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா, சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தமை உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார். மேலும், தந்தை செல்வாவின் நினைவைப் போற்றும் வகையில் மலையகத்தில் சிரார்த்த தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மேற்கொள்ளும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Read More

ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை! ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ​குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்! இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல மூத்த சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாவலிலுள்ள அவரது இல்லத்தில் காலமானபோது அவருக்கு வயது 82 ஆகும். இலங்கை இசை உலகில் தனது தனித்துவமான குரல்வளத்தினாலும் சமூகச் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் பாடல்களினாலும் பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் நாளாந்த வருகைக் கொடுப்பனவை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ​தற்போது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்கி வருகிறது. எனினும், பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக மற்றும் 60 வயதைக் கடந்த தொழிலாளர்கள் பலரும் இந்தத் தொகையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ​அரசாிகத் தரவுகளின்படி சுமார் 73 ஆயிரத்து 500 தொழிலாளர்களே தற்போது இந்தக் கொடுப்பனவைப் பெறுகின்றனர். ஆனால், சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக இருக்கக் கூடும் எனவும், எனவே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணபதி கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.​அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவை 500 ரூபாவாக உயர்த்துவதுடன்,…

Read More