சாமிமலை மாக்கல தோட்டத்தை சேர்ந்த அமரர் பெருமாள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஹட்டன் சிறுவர் இல்லத்தில் இன்று (26/02) சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் அங்கத்தவரான அமரர் பெருமாள் அவர்களின் மகள் ரானி இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்கCategory: செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி..
கொரோனா வைரஸ் தொற்று காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னேண்டோபுள்ளே தெரிவித்தார். இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள ஐந்து இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி, 28 ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து கிடைத்த தடுப்பூசிகளில் மூன்று இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசிகளில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 907 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன.
மேலும் வாசிக்கதங்கப் பதக்கங்களை அள்ளிச் செல்லும் மாத்தளை தமிழ்ப் பட்டதாரி..
தங்கப் பதக்கங்களை அள்ளிச் செல்லும் மாத்தளை தமிழ்ப் பட்டதாரி மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினரும், மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் இரசாயனத் துறை உதவி விரிவுரையாளருமான செல்வி. சுகுமார் ரவீனா அவர்கள் இவ் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதையும் பெற்றுக் கொள்கின்றார். இவர் இரசாயனவியல் துறையில் முதலாம் வகுப்பு தேர்ச்சியை தனது இளமானி விஞ்ஞான பட்டத்தில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் பெற்றுக் கொள்ளும் தங்கப் பதக்கங்கள் மற்றும் விருதுகளின் விபரங்கள் பின்வருமாறு, 1. திரு. அருணாசலம் மகாதேவா ஞாபகார்த்த விருது – இரசாயனவியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி 2. பேராசிரியர் S. மகேஸ்வரன் தங்கப் பதக்கம் – உயர் சேதன இரசாயனம் சிறந்த பெறுபேறுகள் 3.…
மேலும் வாசிக்க2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு ..
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றன. 2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் கிடைக்காத பரீட்சார்த்திகள் WWW.DOENTS.LK என்ற இணையதள முகவரிக்குள் பிரவேசித்து தங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதனூடாக பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் தவறுகளை பரீட்சார்திகள் திருத்திக்…
மேலும் வாசிக்கஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரிப்பு .
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. 4 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன. இதனடிப்படையில் பொரலஸ்கமுவ ,கல்கிஸ்ஸை,கொட்டுகொட , வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 458 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர். இதன்பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 76 ஆயிரத்து 514 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 496 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வாசிக்கசட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நமுனுகுல வீதியில் உள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் நேற்று இரவு பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்தின் போது பசுக்களை பதுளைக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும், லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பசறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ப சறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்தி : ராமு தனராஜா
மேலும் வாசிக்கநோர்வூட் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு யுவதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி!
நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு யுவதிகளுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதென மஸ்கெலிய பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி பி. ஏ. பாஸ்கரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் கடந்த 11ஆம் திகதி மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு கொவிட் 19 தொற்றுள்ளதென கடந்த 20 ம் திகதி அறியக்கிடைத்தது. இதனையடுத்து ஆடை தொழிற்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அதில் பணி புரியும் 40 யுவதிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுடன் மேலும் 150 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளரெனவும் எனவும்,அவர்களிள் 50 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையோருக்கு நாளை அல்லது நாளை மறுதினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதார மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார். அத்துடன் மஸ்கெலிய புரவுன்சீக் புளும்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த யுவதி அந்த ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த…
மேலும் வாசிக்க2021 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை நாளை நிறைவு!
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வியாண்டுக்கான முதலாம் தவணை நாளையுடன் (25.02.2021) நிறைவடையவுள்ளது.இந்நிலையில், 2021 ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்கபசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..
பசறை பிரதேசத்தில் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கடந்த 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்த 23 வயதுடைய கோணக்கலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பசறை கோவில் கடை பகுதியில் தொற்றாளராக இனங்காணப்பட்ட பசறை பொதுசுகாதார பெண் குடும்ப நல உத்தியோகஸ்தரோடு நெருங்கிய தொடர்பை பேணிய இவரது கணவர் ) ஆணொருவரும் (வயது42) உள்ளடங்குவர். குறித்த தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களாக 78 பேர் இனங்காணப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இதேவேளை பண்டாரவளை வடக்கு கெபில்வெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி என பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்…
மேலும் வாசிக்கநாட்டில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் ..
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. மூன்று கொவிட் மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன வத்தளையைச் சேர்ந்த, 75 வயதான ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, உயிரிழந்துள்ளார். நுவரெலியாவைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். வலப்பனையைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே நேற்று 492 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளங் காணப்பட்டனர். இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 75 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளதுடன் 4 ஆயிரத்து…
மேலும் வாசிக்க