நானுஓயா நிருபர்
நுவரெலியா விக்டோரியா மற்றும் மார்காஸ்தோட்ட பிளக்கெட் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டி நுவரெலியா மாநகரசபை சினிசிட்டா மைதானத்தில்(07) திங்கட்கிழமை இடம்பெற்றது.
கந்தபளை அருளாநந்தம் பிரகாஷ் தலைமையில் விளையாடிய நுவரெலியா விக்டோரியா அணி 3 க்கு 0 என்ற கணக்கில் பிளக்கெட் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ப.பிரதீப் மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதங்களை பெற்று கொடுத்ததோடு முதல் போட்டியில் 30 பந்துகளுக்கு 72 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 48 பந்துகளுக்கு 85 ஓட்டங்களையும் பெற்று கொடுத்து சிறந்த ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றதோடு பந்து வீச்சில் அணி சார்பில் முகமட் பஸ்மி இரண்டு போட்டிகளில் 07 ஓவர் பந்து வீசி 06 விக்கெட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் இரு அணிகளின் சிறந்த வீரருக்கான விருதினையும் பெற்று கொண்டதோடு மூன்று போட்டிகளிலும் 04 சிறந்த பிடியெடுப்பை பெற்ற ரா,பிரஷாந்த் சிறந்த பிடியெடுப்பாளருக்கான விருத்தினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.