ஹட்டன் நகரில் உள்ள பிரதான தனியார் அரச பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையும்,அந்த கழிவறையில் இருந்து வெளிவரும் கழிவுநீரும்.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள், பாடசாலை மாணவர்கள், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து செல்கின்றனர். அத்துடன் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பல வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் உள்ளன பாரிய சுகாதார சீர்கேடான உள்ள இந்த கழிவறையால் அப் பகுதியில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
தற்போது தீப திருநாள் என்பதால் பல் ஆயிரக்கணக்கான பயனிகள் இந்த வாரம் அந்த பேருந்து தரிப்பிடத்தில் ஒன்று கூடுவர் ஆகையால் ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அங்கு உள்ள பொது கழிவறையை மூடி நவீன முறையில் கழிவறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பயணிகள்
.மஸ்கெலியா நிருபர்.