தீபாவளி தினத்தை முன்னிட்டு அனைத்து சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதனால், அடுத்த நாள் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 13ம் திகதி வழங்கப்படும் விடுமுறை தினத்திற்காக, எதிர்வரும் 18ம் திகதி பாடசாலை நடாத்தப்படும் என சப்ரகமுவ ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, ஆளுநர் நவீன் திஸாநாயக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.