“வறுமையான சோமாலியா நாட்டில் கூட ஆசியர்களுக்கு 285000/- ரூபா சம்பளம்” ஆனால் எமது நாட்டின் ஆசிரியர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்படுவதாக ஆசிரியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் தெரிவித்தார்.
அப்புத்தளை தமிழ் மத்திய கல்லுரியில் இன்று நடைபெற்ற அதிபர், ஆசிரியர்கள் கலந்துறையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வறுமையான சோமாலியா நாட்டில் கூட ஆசியர்களுக்கு மாதம் 285000/- ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது ஆனால் எமது நாட்டின் ஆசிரியர்களுக்கு சொற்ப சம்பளம் வழங்கப்படுகிறது உலக நாடுகளில் ஆசிரியர்களுக்கு தனித்துவமான மதிப்பு வழங்கப்படுகிறது எமது நாட்டில் ஆசிரியர்களை அரசாங்கங்கள் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்காது அதிபர், ஆசிரியர்களை ஏமாற்றி வருகிறார்கள் 25 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கும் இடையிலான முறண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கிறது குறித்த முரண்பாட்டை கலைய வேண்டும் பொருளாதார சிக்களில் நாம் வாழ்ந்து வருகிறோம் சிக்கலுக்கு எதிராக களம் கானவேண்டும்.
30 ஆண்டுகளுக்கு மேல் சமுகத்திற்காக சேவை செய்யும் ஆசிரியர்கள் ஓய்வு காலத்தில் அவர்களுக்கான நலன்புரி செயற்பாடு இன்றி, கவனிப்பார் இன்றி இறுதி கால வாழ்கை முடிகிறது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரச வரவு செலவு திட்டத்தின் கீழ் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கி அவர்களை சுக போகத்துடன் கவனித்து வருகிறது இந்த அரசாங்கம் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பாடுப்படும் ஆசிரியர்களுக்கு முறையான சம்பள உயர்வு இல்லை என தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு காணி,வீட்டு உரிமை நில உரிமை கூட இல்லாமல் வாழ்கிறார்கள் எனவே அரசியல் மாற்த்தின் மூலமே அனைத்திற்கும் தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார்.

