இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பமானது முதல் இன்று வரை மலையக மக்களையும் அரவணைத்துக்கொண்டே பயணித்துள்ளது, அம்மக்களுக்காக குரல் கொடுத்துள்ளது, புதிய தலைவரும் அதே வழியில் பயணிப்பாரென நம்புகின்றோம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
